குடிநீர் விநியோகம் தொடர்பாக 7 மாவட்ட அதிகாரிகளுடன் குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் ஆய்வு

கோவை : குடிநீர் விநியோகம் தொடர்பாக 7 மாவட்ட அதிகாரிகளுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் கோவையில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.


கோவை : குடிநீர் விநியோகம் தொடர்பாக 7 மாவட்ட அதிகாரிகளுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் கோவையில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.



கோடை காலம் முடிந்த நிலையிலும் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீர் விநியோகம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மககேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இந்தக் கூட்டத்தில், தற்போதைய குடிநீர் இருப்பு நிலை, அதை விநியோகிக்கும் முறைகள், குடிநீர் தேவை உள்ள பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கீழ்மட்ட நிலை வரையில் சென்று ஆய்வு செய்திட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக ஏழு மாவட்ட குடிநீர் மேம்பாடு பணிக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...