கோவை : சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அனைத்து இந்தியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மத்திய ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை : சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அனைத்து இந்தியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மத்திய ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்க ஐ.நா. முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தினத்தில், 200 நாடுகளைச் சேர்ந்த பல கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என ஆயுஷ் துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதியின் மூலம் மாற்று மருந்துகளைக் கண்டுபிடிப்பது பற்றிய ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வியை இந்த துறை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்க ஐ.நா. முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தினத்தில், 200 நாடுகளைச் சேர்ந்த பல கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என ஆயுஷ் துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதியின் மூலம் மாற்று மருந்துகளைக் கண்டுபிடிப்பது பற்றிய ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வியை இந்த துறை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.