ரத்தினம் கல்லூரியின் எதிரே வீணடிக்கப்படும் தண்ணீர் : வறட்சி காலத்திலாவது அதிகாரிகளின் அலட்சியம் தவிர்க்கப்படுமா..?

கோவை : ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியின் எதிரே குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியின் எதிரே குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக, சென்னையில் ஓட்டல்களும், விடுதிகளும் மூடப்பட்டு வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்பேரில், கோவை மாநகராட்சியும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியின் எதிரே குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகிக் கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பலமுறை தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 



வறட்சி காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வரும் நிலையில், தூங்கிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக் கொண்டு, இதுபோன்ற உடைப்புகளை சரிசெய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...