பெரியநாயக்கன் பாளையம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே சட்டவிரோதமாக காட்டுப் பன்றியை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே சட்டவிரோதமாக காட்டுப் பன்றியை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரிய நாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியின் அருகே உள்ள பட்டா நிலத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றி நேற்றிரவு வேட்டையாடப்பட்டது. அப்போது, வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகிளில்ல் வனத்துறை அதிகாரி சுரேஷ் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயம், இருவர் மர்மமான பையைத் தூக்கி வந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த வனத்துறையினர், அவர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில், காட்டுப் பன்றியின் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து, வனவிலங்கு தடுப்புச் சட்டம் 1972-க் கீழ் வழக்குப்பதிவு செய்து, கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி. குமார் (38), திருமலைநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த எம். ஆறுமுகம் (51) ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர், இருவருக்கும் தலா ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...