நாட்டு மாடுகளை பாதுகாக்கும் விதமாக பட்டி பாஸ் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கால்நடை விவசாயிகள் மனு

கோவை : நாட்டு மாடு மேய்ச்சலுக்குப் பட்டி பாஸ் வழங்கி, அதனை அழிவில் இருந்து காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கால்நடை விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை : நாட்டு மாடு மேய்ச்சலுக்குப் பட்டி பாஸ் வழங்கி, அதனை அழிவில் இருந்து காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கால்நடை விவசாயிகள் மனு அளித்தனர். 

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கொங்கு பட்டீஸ்வரன் கோசாலை சார்பில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் நாட்டு மாடு மேய்ச்சலுக்குப் பட்டி பாஸ் வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.



இதன் பின்னர் அவர்கள் கூறியதாவது :- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர், வடசித்தூர், குப்பனூர் உள்ளிட்ட 18 கிராமங்கள் இருக்கிறது. இந்தப் பகுதிகளில், நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி மறுத்த காரணத்தால், நாட்டு மாடுகள் இனம் அழிவை நோக்கி செல்கிறது. உணவின்றி தவித்த மாடுகளை விவசாயிகள் அறுவைக்கு விற்று விட்டனர். மேலும், நாட்டு மாடுகள் மேய்ப்பதால் வனத்தின் வளம் பெறும் என்ற நிலை உள்ளது. நாட்டு மாட்டுப் பாலில் அதிக புரத சத்துகள் உள்ளன. வனப் பகுதிகளை ஒட்டி கேளிக்கை விடுதிகள், ஆசிரமங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளதே, மாடுகள் மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி மறுக்கக் காரணமாகும். 

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளுக்குப் பட்டி பாஸ் வழங்கி மேய்ச்சலுக்கு அனுமதி அளித்து, நாட்டு மாடுகளை அதன் இன அழிப்பில் இருந்து காப்பாற்றிட மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...