திருப்பூர் : திருப்பூரில் 13 வயது பீகார் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமியை ஏமாற்றிய ஒடிசா இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் 13 வயது பீகார் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமியை ஏமாற்றிய ஒடிசா இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பீகாரைச் சேர்ந்த 13 வயது சிறுமி திருப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்கு சென்ற பின் ஒடிசாவைச் சேர்ந்த அஜித் க்ரஷல் (26) என்பவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித் க்ரஷல் மீது சிறுமியின் பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அஜித் க்ரஷலை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த 13 வயது சிறுமி திருப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்கு சென்ற பின் ஒடிசாவைச் சேர்ந்த அஜித் க்ரஷல் (26) என்பவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித் க்ரஷல் மீது சிறுமியின் பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அஜித் க்ரஷலை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.