கோவையில் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவித்துள்ளார்.

கோவை : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக யூ.ஒய்.இ.ஜி.பி. என்ற கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ. 10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1,25,000 வழங்கப்படும். 5 சதவீத சுய முதலீடு அவசியமாகும்.

இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுபிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், சிறப்புப்பிரிவினருக்கு 45-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்திலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தில் செயல்பட்டு வரும் இலவச பொது சேவை மையம் மூலமாகவோ, விண்ணப்பதாரருடைய சரியான தகவல்களை பூர்த்தி செய்த பின்னர், பள்ளி மாற்று சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, தாசில்தாரரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், விலைப்பட்டியல் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். பின்னர், பதிவிறக்கம் செய்த திட்ட அறிக்கை படிவத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி படிவத்தை மாவட்ட தொழில்மையம் நேர்காணலுக்கு அழைக்கும்போது, நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், 295 நபர்கள் ரூ.175 லட்சம் மானியத்துடன் ரூ.600 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...