கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை தேசிய புலனாய்வு முகமையினர் இன்று கைது செய்தனர்.
கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை தேசிய புலனாய்வு முகமையினர் இன்று கைது செய்தனர்.
இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும் கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதனிடையே, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின் (கோவை), அசாரூதின் (நஞ்சுண்டாபுரம், போத்தனூர்), சேக் ஹித்யதுல்லா (அலமீன் காலனி), எம். அபுபக்கர் (குனியமுத்தூர்), சதாம் உசேன் (கரும்புக்கடை), இப்ராகிம் சஹின் (மணியா தோட்டம்) ஆகிய 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக கொச்சினில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், நேற்று கோவையில் சம்பந்தப்பட்ட நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின், அசாரூதின், சேக் ஹித்யதுல்லா, எம். அபுபக்கர், சதாம் உசேன், இப்ராகிம் சஹின் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பது, கருத்துக்களை பரப்புவது, உதவி செய்வது போன்ற குற்றத்தின் கீழ் முகமது அசாருதீனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர் மீது யு.ஏ.பி.ஏ (unlawful activity prevention act) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமது அசாரூதீனை நாளை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அசாரூதீனுக்கு இலங்கைக் குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஹசீமுடன் பேஸ்புக்கில் தொடர்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும் கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதனிடையே, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின் (கோவை), அசாரூதின் (நஞ்சுண்டாபுரம், போத்தனூர்), சேக் ஹித்யதுல்லா (அலமீன் காலனி), எம். அபுபக்கர் (குனியமுத்தூர்), சதாம் உசேன் (கரும்புக்கடை), இப்ராகிம் சஹின் (மணியா தோட்டம்) ஆகிய 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக கொச்சினில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், நேற்று கோவையில் சம்பந்தப்பட்ட நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின், அசாரூதின், சேக் ஹித்யதுல்லா, எம். அபுபக்கர், சதாம் உசேன், இப்ராகிம் சஹின் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பது, கருத்துக்களை பரப்புவது, உதவி செய்வது போன்ற குற்றத்தின் கீழ் முகமது அசாருதீனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர் மீது யு.ஏ.பி.ஏ (unlawful activity prevention act) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமது அசாரூதீனை நாளை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அசாரூதீனுக்கு இலங்கைக் குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஹசீமுடன் பேஸ்புக்கில் தொடர்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.