திருப்பூர் : குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் : குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் "குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட மாணவ மாணவிகள், சைல்ட் லைன் அமைப்பினர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, 'குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதோடு, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிப்போம்' என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.‘ இதைத் தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி மீட்கப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, தற்போது கல்லூரி படிப்பை தொடர்ந்து வரும் மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் "குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட மாணவ மாணவிகள், சைல்ட் லைன் அமைப்பினர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, 'குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதோடு, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிப்போம்' என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.‘ இதைத் தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி மீட்கப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, தற்போது கல்லூரி படிப்பை தொடர்ந்து வரும் மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.