கோவை : மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை : மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டும் எந்தவிதமான பலனும் அளிக்கவில்லை. இதனால், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, குறை தீர்ப்பு வாகனம் மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் பேசுகையில், "வாராந்திர குறைதீர்ப்பு முகாமை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் ஜுலை மாதம் முதல் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் காலை முதல் மதியம் வரை மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இது தொடர்பான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும். மேலும், மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும். " என்றார்.
மக்கள் தங்களது குறைகள் அல்லது புகார்களை கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி முலமாகவோ அளிக்கலாம்
தொலைபேசி : 0422 - 2390261 / 63 (பணிநேரம் 10.00 am - 5.45 pm)
வாட்ஸ்அப் எண் : 81900 00200 (புகைப்படங்களுடன்)
குறுஞ்செய்தி : 74404 22422
மின்னஞ்சல் முகவரி : [email protected]
வார்டு எண், பகுதி விபரம், புகைப்படம், பிரச்சனை மற்றும் நாள் ஆகியவை இந்த குறைகளை தெரிவிப்பவர்கள் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டும் எந்தவிதமான பலனும் அளிக்கவில்லை. இதனால், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, குறை தீர்ப்பு வாகனம் மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் பேசுகையில், "வாராந்திர குறைதீர்ப்பு முகாமை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் ஜுலை மாதம் முதல் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் காலை முதல் மதியம் வரை மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இது தொடர்பான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும். மேலும், மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும். " என்றார்.
மக்கள் தங்களது குறைகள் அல்லது புகார்களை கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி முலமாகவோ அளிக்கலாம்
தொலைபேசி : 0422 - 2390261 / 63 (பணிநேரம் 10.00 am - 5.45 pm)
வாட்ஸ்அப் எண் : 81900 00200 (புகைப்படங்களுடன்)
குறுஞ்செய்தி : 74404 22422
மின்னஞ்சல் முகவரி : [email protected]
வார்டு எண், பகுதி விபரம், புகைப்படம், பிரச்சனை மற்றும் நாள் ஆகியவை இந்த குறைகளை தெரிவிப்பவர்கள் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.