புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு கோவை ஜெயின் சமூகத்தின் சார்பில் ரூ. 3.02 கோடி நிதியுதவி

கோவை : புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு ஜெயின் சமூகத்தின் சார்பாக ஒரே நாளில் வசூல் செய்த 3 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

கோவை : புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு ஜெயின் சமூகத்தின் சார்பாக ஒரே நாளில் வசூல் செய்த 3 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த பிப்.14-ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும், வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஜெயின் சங்காத்தானா மற்றும் சர்வதேச ஜெயின் அமைப்பின் சார்பாக ஒரே நாளில் திட்டமிடப்பட்டு 3 கோடியே இரண்டு லட்சம் செய்யப்பட்டது. வசூல் செய்த நிதியை தமிழகத்தை சேர்ந்த 7 வீரர்களுக்கும், மேலும் கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி ஷீமாவிற்கு வழங்கப்பட்டது. முன்னதாக, ஜெயின் சமூக அமைப்பின் நிர்வாகிகள் கைலாஷ் ஜெயின், தினேஷ் கவாத், பவன் கோத்தாரி மற்றும் திலீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகிகள், “புல்வாமா தாக்குதலில் பலியான அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதியை பகிர்ந்து அளித்து வருகிறோம், என தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...