தயா அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கெதிரான பிரச்சனைகளை தீர்க்க முயற்சி : கோவையில் லதா ரஜினிகாந்த் பேட்டி

கோவை : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தயா அமைப்பின் மூலம் குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தயா அமைப்பின் மூலம் குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தயா என்ற குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அவ்வமைப்பின் தலைவரான லதா ரஜினிகாந்த் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். 



அப்போது, அவர் பேசியதாவது :- குழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஒவ்வொரு ஊராகக் கொண்டு செல்கிறோம். அவ்வமைப்பை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களிலும் ஆரம்பிக்க உள்ளனர். தற்போது, கோவையில் துவங்குவதற்கான ஆலோசனை நடத்தினோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லா விதமான இடங்களிலும் வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. குழந்தைகளைப் பாதுகாப்பது சமுதாய கடமை. குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும். 

இந்த காலத்தில் தனித்தனியாக குடும்பங்கள் இருப்பதும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும். 

பெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை 180012 08866 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.peaceforchildren.net என்ற இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம். பல தரப்பினருடன் இணைந்து குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறது, என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...