கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 கட்டிடக் கழிவு சேகரிப்பு மையங்களை அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 கட்டிடக் கழிவு சேகரிப்பு மையங்களை அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சியில் கட்டிடக் கழிவுகளை கையாளுவதில் பெரும் சிக்கலாக உள்ளது. இந்த நிலையில், மாநகரில் உள்ள 4 மண்டலங்களில் மொத்தம் 17 கட்டிடக் கழிவு சேகரிப்பு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் தலா 4 மையங்களும், கிழக்கு மண்டலத்தில் 5 மையங்களும் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "கட்டிடக் கழிவுகளை மேலாண்மை செய்வதில், தற்காலிக தீர்வு காண்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சேகரமாகும் கட்டிடக் கழிவுகள் மண்டல வாரியாக இந்த மையங்களில் சேகரிக்கப்படும். உக்கடம் பகுதியில் மீண்டும் கட்டிடக் கழிவு மேலாண்மை மற்றும் சுழற்சி மையத்தை அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளதால், இந்த ஆண்டுக்குள் கட்டிடக் கழிவு மேலாண்மை மையம் உருவாகும்," என்றார்.
நடப்பாண்டில் தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் 16-வது இடத்தில் இருந்து 40-வது இடத்திற்கு பின்தங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உக்கடத்தில் கட்டிடக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மையம் அமைக்காததே காரணமாகும்.