கோவை : மதுக்கரை அருகே நடமாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கோவை : மதுக்கரை அருகே நடமாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலக்காடு மெயின் ரோடு அருகே அண்மையில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாடி வந்தது. இது, மதுக்கரை குடியிருப்பு வாசிகள் வளர்த்தி வந்த கால்நடைகளை வேட்டையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த வனத்துறையினர், குட்டிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், சிறுத்தையின் குட்டிகள் உருவத்தில் பெரியதாகவும், தனியே வேட்டையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டதால், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அண்மையில் காந்திநகர் அருகே உள்ள வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டிச் சென்று வளர்ப்பு நாயை தாய் சிறுத்தை வேட்டையாடிச் சென்றது. இதையடுத்து, அந்த வீட்டின் அருகே வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். இந்தக் கூண்டில் சிறுத்தை அகப்பட்டுவிட்டால், அதனை சிறுமுகை வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மதுக்கரை பகுதியில் சிறுத்தைக்காக 4-வது முறையாகக் கூண்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலக்காடு மெயின் ரோடு அருகே அண்மையில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாடி வந்தது. இது, மதுக்கரை குடியிருப்பு வாசிகள் வளர்த்தி வந்த கால்நடைகளை வேட்டையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த வனத்துறையினர், குட்டிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், சிறுத்தையின் குட்டிகள் உருவத்தில் பெரியதாகவும், தனியே வேட்டையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டதால், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அண்மையில் காந்திநகர் அருகே உள்ள வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டிச் சென்று வளர்ப்பு நாயை தாய் சிறுத்தை வேட்டையாடிச் சென்றது. இதையடுத்து, அந்த வீட்டின் அருகே வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். இந்தக் கூண்டில் சிறுத்தை அகப்பட்டுவிட்டால், அதனை சிறுமுகை வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மதுக்கரை பகுதியில் சிறுத்தைக்காக 4-வது முறையாகக் கூண்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.