கோவை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணி நேரத்திற்குள் தொடங்குகிறது.
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணிநேரத்திற்குள் தொடங்கும். குறிப்பாக. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்யக்கூடும். அதனால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவின் தலைநகர் பகுதியான திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கூறிய இடங்களில் நாளை முதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணி நேரத்திற்குள் தொடங்குகிறது.
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணிநேரத்திற்குள் தொடங்கும். குறிப்பாக. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்யக்கூடும். அதனால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவின் தலைநகர் பகுதியான திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கூறிய இடங்களில் நாளை முதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.