பொது சுகாதாரமின்றி காட்சியளிக்கும் கோவை ஆட்சியர் வளாகம் : முன்மாதிரியாக திகழ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோவை : பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக பல்வேறு மனுக்களைப் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் வளாகம் குப்பைகளால் நிரம்பி வழிவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக பல்வேறு மனுக்களைப் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் வளாகம் குப்பைகளால் நிரம்பி வழிவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை மாவட்டத்தின் மையப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, திங்கட்கிழமை நாட்களில் மனுநாள் என்பதால், கூடுதலான மக்களின் கூட்டமும் தென்படுகிறது. 



இந்த சூழலில், கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பொது சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக, கருவூல அலுவலகம் அருகே மலை போல் குவிந்த குப்பைகள் அகற்றப்படாமல் காட்சி அளிக்கிறது. அதிக அளவு பொதுமக்கள் அதிலும் முதியவர் வரும் இடத்தில் இந்த குப்பை மலையால் தொற்று நோய் அபாயம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் முன்மாதிரி அலுவலகமாக இருக்க வேண்டிய ஆட்சியர் அலுவலகமே இப்படி குப்பை குவியல்களின் பிறப்பிடம் போல இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு பொது சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...