தேங்காய் தொட்டிகளை எரிக்கும் நிறுவனங்களால் மாசு : தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்து வந்து ஆட்சியரிடம் மனு

கோவை : தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி விவசாயிகள் தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்து வந்து கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி விவசாயிகள் தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்து வந்து கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மதுக்கரை வட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி அருகே உள்ள ஓராட்டு குப்பை பகுதிகளில் தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களால் மாசு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.



இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "ஓராட்டு குப்பை கிராமத்தில் நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் மாசு ஏற்படுகிறது. இதனால், அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்நிறுவனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...