கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 53 பேரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 53 பேரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இந்த சட்டவிரோத விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்தாலும் விற்பனைகள் ஓய்ந்தபாடில்லை. அதேபோல, கேரளா மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து சிலர் கோவை புறநகர் மாவட்டத்தில் தடையை மீறி விற்பதாக மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில், லாட்டரி விற்பனையைத் தடுக்கும் முயற்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின்பேரில், கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் லாட்டரி விற்பனையை தடுக்க சிறப்பு சோதனை நடைபெற்றது. அதன்படி, தனிப்படை போலீசார் பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 28-ம் தேதி 10 பேரும், 29-ம் தேதி 4 பேரும், 30-ம் தேதி 5 பேர் என 19 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல, பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேர்த்து மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இந்த சட்டவிரோத விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்தாலும் விற்பனைகள் ஓய்ந்தபாடில்லை. அதேபோல, கேரளா மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து சிலர் கோவை புறநகர் மாவட்டத்தில் தடையை மீறி விற்பதாக மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில், லாட்டரி விற்பனையைத் தடுக்கும் முயற்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின்பேரில், கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் லாட்டரி விற்பனையை தடுக்க சிறப்பு சோதனை நடைபெற்றது. அதன்படி, தனிப்படை போலீசார் பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 28-ம் தேதி 10 பேரும், 29-ம் தேதி 4 பேரும், 30-ம் தேதி 5 பேர் என 19 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல, பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேர்த்து மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.