நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட 1.5 டன் பழங்களை வைத்து ஜாம், ஜெல்லிகளை தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட 1.5 டன் பழங்களை வைத்து ஜாம், ஜெல்லிகளை தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. இதில், பலா, ஆரஞ்ச், பப்ளிமாஸ், சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை, நாவல், மாம்பழம், வாழை, பேரி, பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி உட்பட நீலகிரியின் பாரம்பரிய பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த பழங்களைக் கொண்டு முகப்பு வாயிலில் மயில், வண்ணத்து பூச்சி, விவசாயிகளுடன் மாட்டு வண்டி ஆகிய வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியில் பழங்கள் சேதமடைந்து வீணாவதை தவிர்க்கும் விதமாக, அனைத்து பழங்களும் நூலில் கோர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதனால், ஆண்டுதோறும் காட்சிபடுத்தப்படும் டன் கணக்கான பழங்கள் குழி தோண்டி புதைக்கும் நிகழ்வு இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க காட்சிக்கு பயன்படுத்திய அனைத்து பழங்களிலும், ஜாம், ஜெல்லி தயாரிக்க தோட்டக்கலை துறை முடிவு செய்தது. இதன் அடிப்படையில், பழக்கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், இந்த பழங்கள் வடிவமைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு, பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அனைத்து பழங்களும் ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிக்க பிரிக்கும் பணிகள் துவங்கின. பின்னர், இவற்றைக் கொண்டு தரமான ஜாம், ஜெல்லி தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. இதில், பலா, ஆரஞ்ச், பப்ளிமாஸ், சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை, நாவல், மாம்பழம், வாழை, பேரி, பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி உட்பட நீலகிரியின் பாரம்பரிய பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த பழங்களைக் கொண்டு முகப்பு வாயிலில் மயில், வண்ணத்து பூச்சி, விவசாயிகளுடன் மாட்டு வண்டி ஆகிய வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியில் பழங்கள் சேதமடைந்து வீணாவதை தவிர்க்கும் விதமாக, அனைத்து பழங்களும் நூலில் கோர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதனால், ஆண்டுதோறும் காட்சிபடுத்தப்படும் டன் கணக்கான பழங்கள் குழி தோண்டி புதைக்கும் நிகழ்வு இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க காட்சிக்கு பயன்படுத்திய அனைத்து பழங்களிலும், ஜாம், ஜெல்லி தயாரிக்க தோட்டக்கலை துறை முடிவு செய்தது. இதன் அடிப்படையில், பழக்கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், இந்த பழங்கள் வடிவமைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு, பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அனைத்து பழங்களும் ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிக்க பிரிக்கும் பணிகள் துவங்கின. பின்னர், இவற்றைக் கொண்டு தரமான ஜாம், ஜெல்லி தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.