வீட்டுமனை பிரிப்பதற்கு அனுமதி வழங்க ரூ.2.50 லட்சம் லஞ்சம் : கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2 பேர் கைது

கோவை : கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கு அனுமதி வழங்க 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2 பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கு அனுமதி வழங்க 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2 பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சோமசுந்தரம் என்பவர் கோவையின் பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுந்தராபுரம் பகுதியில் புதிதாக வாங்கிய நிலைத்தை வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்த தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், தனது அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் மூலம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அதனை தர மறுத்த சோமசுந்தரம் 5 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதுடன், அதில் முதல்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும், சான்றிதழ் வழங்கிய பின்னர் மீதத் தொகையை வழங்குவதாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையிடம் புகார் அளித்த அவர், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு அதிகாரியை வரவழைத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகள் 2.50 லட்சத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் உதவியாளர் ஆனந்தகுமார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 



கைது செய்யபட்ட இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தோத்திரமேரி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டனர்.

அப்போது, இருவரையும் வருகின்ற ஜூன் 13-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்தோத்திரமேரி உத்தரவிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...