சுட்டெரிக்கும் கோடை வெயிலுடன் வீசும் அனல் காற்று : பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கோவை : தமிழகம் முழுவதும் கடும் வெயில் மற்றும் அனல்காற்றும் வீசி வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு தமிழக ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை : தமிழகம் முழுவதும் கடும் வெயில் மற்றும் அனல்காற்றும் வீசி வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு தமிழக ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைப்பதுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், கோரிக்கையை நிராகரித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி எனக் கூறினார். 

இந்த நிலையில், கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசுவதால் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பாடங்களை கவனிக்க மாணவர்களின் உடல்நலம் மிக அவசியம் என்பதால் 2 வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...