கோவை : ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் முன்பு கிறிஸ்துவர் ஒருவர், அவரது மதத்தை மிகைப்படுத்தி பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
கோவை : ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் முன்பு கிறிஸ்துவர் ஒருவர், அவரது மதத்தை மிகைப்படுத்தி பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
கோவையில் இருக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் ஈஷா யோகா அறக்கட்டளையின் 112 அடி உயர ஆதியோகி சிலையும் திகழ்கிறது. உலகின் மிக உயரமான சிலை என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த சிலை இடம்பெற்றுள்ளது. எனவே, இதனை காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல, நேற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆதியோகி சிலையைக் காண வந்திருந்தனர். அப்போது, அனைவரும் சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், சிலர் தரிசனமும் செய்தும் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென சிலையின் அருகே சென்ற ஜேபசிங் என்பவர் மண்டியிட்டு, "யோகாவோ, யோகியோ, பாம்போ மனிதனை இரட்சிக்க முடியாது, இந்த உலகையும், மக்களையும் இயேசு மட்டுமே பாதுகாப்பார் எனக் கூறினார். அப்போது, அங்கிருந்த தன்னார்வலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், ஆன்மீகத்திற்கான இடத்தில் இதுபோன்று கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக ஜேபசிங் மீது காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் விதமாக ஈஷா யோகா மையத்தில் அந்த நபர் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்து மதம் மற்றும் ஆன்மீக இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது இது முதல்முறையல்ல. கிறிஸ்துவர்களின் இது மாதிரியான செயல்களால், பொதுமக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளாமல், இதனை ஒரு வாய்ப்பாக கருதி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் இருக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் ஈஷா யோகா அறக்கட்டளையின் 112 அடி உயர ஆதியோகி சிலையும் திகழ்கிறது. உலகின் மிக உயரமான சிலை என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த சிலை இடம்பெற்றுள்ளது. எனவே, இதனை காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல, நேற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆதியோகி சிலையைக் காண வந்திருந்தனர். அப்போது, அனைவரும் சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், சிலர் தரிசனமும் செய்தும் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென சிலையின் அருகே சென்ற ஜேபசிங் என்பவர் மண்டியிட்டு, "யோகாவோ, யோகியோ, பாம்போ மனிதனை இரட்சிக்க முடியாது, இந்த உலகையும், மக்களையும் இயேசு மட்டுமே பாதுகாப்பார் எனக் கூறினார். அப்போது, அங்கிருந்த தன்னார்வலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், ஆன்மீகத்திற்கான இடத்தில் இதுபோன்று கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக ஜேபசிங் மீது காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் விதமாக ஈஷா யோகா மையத்தில் அந்த நபர் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்து மதம் மற்றும் ஆன்மீக இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது இது முதல்முறையல்ல. கிறிஸ்துவர்களின் இது மாதிரியான செயல்களால், பொதுமக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளாமல், இதனை ஒரு வாய்ப்பாக கருதி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.