ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கோவை : காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கணபதி மோர் மார்க்கெட் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கணபதி மோர் மார்க்கெட் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணபதி மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு குற்றமற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 14-ம் தேதி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அன்று மாலையே ஏழு பேர் சரணடைந்து விட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். சிறையில் உள்ளவர்களை பார்க்க சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூகமான சூழல் ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தனர். 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...