கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய டயாலிசிஸ் மையம் ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் இலவசமாக பயனடைந்து வருகின்றனர் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறுநீரக நோயாளிகளுக்கான புதிய டயாலிசிஸ் மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொதுமக்கள் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலைகளில் 20 நோயாளிகள் இந்த மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இந்த மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படுகிறது.
பொதுமக்கள் 9498599703, 9159557631 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொதுமக்கள் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலைகளில் 20 நோயாளிகள் இந்த மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இந்த மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படுகிறது.
பொதுமக்கள் 9498599703, 9159557631 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.