கோவை : காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கணபதி மோர் மார்க்கெட் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கணபதி மோர் மார்க்கெட் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணபதி மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு குற்றமற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 14-ம் தேதி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அன்று மாலையே ஏழு பேர் சரணடைந்து விட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். சிறையில் உள்ளவர்களை பார்க்க சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூகமான சூழல் ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணபதி மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு குற்றமற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 14-ம் தேதி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அன்று மாலையே ஏழு பேர் சரணடைந்து விட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். சிறையில் உள்ளவர்களை பார்க்க சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூகமான சூழல் ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தனர்.