திருப்பூர் : திருப்பூர் அருகே இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடையன்கிணறு பகுதியில் 600-க்கும்.மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வரும் நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன், எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனமானது கோழித்தீவனம் அரைப்பதாக தொடங்கப்பட்டது. நாளடைவில், தற்போது 2 வருடங்களாக கோழிக்கழிவுகளையும், மாட்டு இறைச்சி கழிவுகளையும் அரைத்து தீவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த கழிவுகளை இயந்திரத்தில் அரைக்கும் போது, வெளியேறும் நச்சு புகையால், அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக மூச்சுத் திணறல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும், அலட்சியமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்றக் கோரி மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடையன்கிணறு பகுதியில் 600-க்கும்.மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வரும் நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன், எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனமானது கோழித்தீவனம் அரைப்பதாக தொடங்கப்பட்டது. நாளடைவில், தற்போது 2 வருடங்களாக கோழிக்கழிவுகளையும், மாட்டு இறைச்சி கழிவுகளையும் அரைத்து தீவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த கழிவுகளை இயந்திரத்தில் அரைக்கும் போது, வெளியேறும் நச்சு புகையால், அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக மூச்சுத் திணறல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும், அலட்சியமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்றக் கோரி மனு அளித்தனர்.