அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி சென்ற இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார் : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இந்திய மாணவர் சங்க சைக்கிள் பேரணியை காவல்துறையினர் திருப்பூரில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இந்திய மாணவர் சங்க சைக்கிள் பேரணியை காவல்துறையினர் திருப்பூரில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் 4 மண்டலங்களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றைய தினம் சைக்கிள் பேரணியை துவங்கினர். 



சென்னை, கோவை, கன்னியாகுமர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துவங்கிய பேரணி 31-ஆம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. இந்த நிலையில், கோவையிலிருந்து திருப்பூர் வழியாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை அனுமதி இல்லையென காவல்துறையினர் வீரபாண்டியருகே தடுத்து நிறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர், போலீசாரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, மாணவர் சங்கத்தினர் தங்கள் பயணத்தை துவங்கினர். இந்த பயணத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...