திருப்பூர்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இந்திய மாணவர் சங்க சைக்கிள் பேரணியை காவல்துறையினர் திருப்பூரில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இந்திய மாணவர் சங்க சைக்கிள் பேரணியை காவல்துறையினர் திருப்பூரில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் 4 மண்டலங்களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றைய தினம் சைக்கிள் பேரணியை துவங்கினர்.

சென்னை, கோவை, கன்னியாகுமர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துவங்கிய பேரணி 31-ஆம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. இந்த நிலையில், கோவையிலிருந்து திருப்பூர் வழியாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை அனுமதி இல்லையென காவல்துறையினர் வீரபாண்டியருகே தடுத்து நிறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீசாரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, மாணவர் சங்கத்தினர் தங்கள் பயணத்தை துவங்கினர். இந்த பயணத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் 4 மண்டலங்களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றைய தினம் சைக்கிள் பேரணியை துவங்கினர்.

சென்னை, கோவை, கன்னியாகுமர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துவங்கிய பேரணி 31-ஆம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. இந்த நிலையில், கோவையிலிருந்து திருப்பூர் வழியாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை அனுமதி இல்லையென காவல்துறையினர் வீரபாண்டியருகே தடுத்து நிறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீசாரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, மாணவர் சங்கத்தினர் தங்கள் பயணத்தை துவங்கினர். இந்த பயணத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.