கோவை : தமிழகத்தில் முதன் முறையாக சிறுவர்களின் ரேஸ் திறைமையை ஊக்குவிக்கும் வகையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் கோவையில் திறக்கப்பட்டது.
கோவை : தமிழகத்தில் முதன் முறையாக சிறுவர்களின் ரேஸ் திறைமையை ஊக்குவிக்கும் வகையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் கோவையில் திறக்கப்பட்டது.

நாட்டில் தற்போது அதிக இளைஞர்கள் பைக் மற்றும் கார் போன்ற ஃபார்முலா ரேஸ்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள சிறு வயது முதலே ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மாலின் ரூப் டாப்பில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில் கோ கார்ட்டிங் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக துவங்கப்பட்ட இந்த அரங்கை கொச்சினை சேர்ந்த ஜோஸ் துவக்கி வைத்தார்.

இது குறித்து சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸின் இயக்குனர் தருண்குமார் பேசுகையில், "இந்த உள் அரங்க மைதானத்தில் 3 வயது முதல் ரேஸில் ஆர்வமுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு சிறிய அளவிலான ஃபார்முலா கார்களை ஓட்டி மகிழ முடியும்.

இதனால். சிறிய வயதிலிருந்தே இது போன்ற பயிற்சிகள் எடுப்பதன் மூலமாக வரும் காலங்களில் சர்வதேச அளவில் சிறந்த பந்தய வீரர்களை உருவாக்க முடியும்," என நம்பிக்கை தெரிவித்தார்.