கோவையில் சிறுவர்களின் ரேஸ் திறமையை ஊக்குவிப்பதற்காக கோவையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் திறப்பு

கோவை : தமிழகத்தில் முதன் முறையாக சிறுவர்களின் ரேஸ் திறைமையை ஊக்குவிக்கும் வகையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் கோவையில் திறக்கப்பட்டது.


கோவை : தமிழகத்தில் முதன் முறையாக சிறுவர்களின் ரேஸ் திறைமையை ஊக்குவிக்கும் வகையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் கோவையில் திறக்கப்பட்டது.



நாட்டில் தற்போது அதிக இளைஞர்கள் பைக் மற்றும் கார் போன்ற ஃபார்முலா ரேஸ்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள சிறு வயது முதலே ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மாலின் ரூப் டாப்பில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில் கோ கார்ட்டிங் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக துவங்கப்பட்ட இந்த அரங்கை கொச்சினை சேர்ந்த ஜோஸ் துவக்கி வைத்தார்.



இது குறித்து சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸின் இயக்குனர் தருண்குமார் பேசுகையில், "இந்த உள் அரங்க மைதானத்தில் 3 வயது முதல் ரேஸில் ஆர்வமுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு சிறிய அளவிலான ஃபார்முலா கார்களை ஓட்டி மகிழ முடியும். 



இதனால். சிறிய வயதிலிருந்தே இது போன்ற பயிற்சிகள் எடுப்பதன் மூலமாக வரும் காலங்களில் சர்வதேச அளவில் சிறந்த பந்தய வீரர்களை உருவாக்க முடியும்," என நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...