கோவையில் 'வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை

கோவை : இந்திய ஸ்டடிஸ்டிகல் இன்ஷிடிடியூட் சார்பில் வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை கோவையில் நாளை நடக்கிறது.

கோவை : இந்திய ஸ்டடிஸ்டிகல் இன்ஷிடிடியூட் சார்பில் வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை கோவையில் நாளை நடக்கிறது. 

கோவை - அவிநாசி சாலையில் உள்ள சாம்பர் டவர்சில் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி.ஐ.சி. தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம், எல்.எம்.டபூள்யூ.வின் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் டி.வி.எஸ். பிரேக் இந்தியாவின் துணைத் தலைவர் எச். ராமசுப்ரமணியன், ஸ்ரீ ராம்கார்த்திக் பாலிமர்ஸ் (பி.) லிமிடெட்டின் இயக்குநர் வி.எஸ். ராம்தாஸ், இத்தாலியின் சைமன் அன்ட் கய்லாந்தின் நிர்வாக இயக்குநர் ரோனி சைமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இந்த பயிற்சி பட்டறையானது, வர்த்தகத்தின் தரத்தை அடையும் வகையில், தயாரிப்பு, செயல், நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. வியாபாரத்திற்கு அவசியமான இயந்திரங்கள் பற்றிய நுண்ணறிவு மற்றும் தக்க நேரத்தில் உரிய முடிவை எடுத்தல் ஆகியவையும் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 3.45 மணி முதல் 7 மணி வரை தொழில்நுட்பம் பற்றிய அமர்வு வகுப்பு நடக்கிறது. 

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...