கோவை : குறிச்சி குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கோவை : குறிச்சி குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கோவையில் உள்ள குளங்கள் போதுமான மழை இல்லாததால், நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக, சில குளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல, கோடை விடுமுறையையொட்டி, இந்த குளங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள்,இளைஞர்கள் என குளத்தில் இறங்கி விளையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் வழக்கம் போல இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான்(14) தனது நண்பகளுடன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கிஉள்ளார். பின்னர், அருகே இருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் உடலை மீட்டனர். பின்னர், சிறுவனின் பிரேதம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.