குறிச்சி குளத்தில் மூழ்கி சிறுவன் பலி : 5 மணி நேரத்திற்கு பின்பு உடல் மீட்பு

கோவை : குறிச்சி குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.


கோவை : குறிச்சி குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கோவையில் உள்ள குளங்கள் போதுமான மழை இல்லாததால், நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக, சில குளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல, கோடை விடுமுறையையொட்டி, இந்த குளங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள்,இளைஞர்கள் என குளத்தில் இறங்கி விளையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் வழக்கம் போல இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான்(14) தனது நண்பகளுடன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கிஉள்ளார். பின்னர், அருகே இருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் உடலை மீட்டனர். பின்னர், சிறுவனின் பிரேதம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...