கோவை : பூனை ரசிகர்களின் கூட்டணி ஆதரவுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக பூனைகளுக்கென ‘கோவை கேட்டரி கிளப்’ கோவையில் துவக்கப்பட்டுள்ளது.
கோவை : பூனை ரசிகர்களின் கூட்டணி ஆதரவுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக பூனைகளுக்கென ‘கோவை கேட்டரி கிளப்’ கோவையில் துவக்கப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ரோட்டரி கிளப்பில், கேட்டரி கிளப் இன்று துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான பூனைகள் பற்றி விளக்கப்பட்டன. பூனை நிபுணர் மற்றும் நீதிபதியான பெங்களூருவை சேர்ந்த சுதகார் கேடிகினேனி, கிளப்பை துவக்கி வைத்தார். கோவை கேட்டரி கிளப் அறிமுக விழாவில் பூனை ரசிகர்கள் பலர் பங்கேற்றனர். செயலாளராக ஆன்னி கரோல், ரீகன், இணை செயலாளராகவும், பொருளாளராக பிரதீபாவும் பொறுப்பேற்றனர்.

பின்னர், கோவை கேட்டரி கிளப் தலைவர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த கேட்டரி கிளப், பூனைகளின் நலனுக்காகவும், பூனைகளை நேசிப்பவர்களுக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் துவக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 5 வகையான பூனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கிளப்பின் முக்கிய நோக்கம், வளர்க்கப்படும் பூனைகளின் தரத்தை மேம்படுத்துவது தான். இந்த கிளப், பூனைகளை ஆரோக்கியமான முறையில் வளர்க்க வழிகாட்டும், என்றார்.
பூனைகளின் முக்கியத்துவம் கருதி கோவை கேட்டரி கிளப், ஒரு பூனை கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் பூனை விரும்பிகள், வளர்ப்போர் மற்றும் வணிகர்கள் இதன்துவக்க விழாவில் பங்கேற்க உள்ளனர்.