உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் பாதுகாப்பு பணிகள் தீவிரம் : டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

நீலகிரி : 123-வது மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து சீரமைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் காவல்துறை சார்பில் டிரோன் கேமரா இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி : 123-வது மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து சீரமைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் காவல்துறை சார்பில் டிரோன் கேமரா இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

நீலகிரியில் ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை நீலகிரி மாவட்ட காவல்துறை எடுத்துள்ளது. நகரில் பொருத்தப்பட்டுள்ள 22 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து மூன்று மொழிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும், கண்காட்சியை துவக்கி வைக்கவும், இறுதி நாள் பரிசலிப்பு விழாவிலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



உதகை நகரில் போக்குவரத்து சீரமைப்பிற்காகவும், குற்றச்செயல்களை தவிர்க்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் 5 ஹெலிகேம் (டிரோன்) கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா உத்தரவின் பேரில், மலர் கண்காட்சி நடைபெறும் 5 நாட்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்கா, படகு இல்ல சாலை, லவ்டேல் சந்திப்பு, படகு இல்லம், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...