கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் பூத் ஸ்லிப்பை வைத்து, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சூலூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 7 மணி முதல் துவங்கியது. சூலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் காலை 6.30 மணி முதலே மக்கள் ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், வரிசையில் நின்று தங்களது வாக்கை அளித்து சென்றனர்.
காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் பூத் ஸ்லிப்பை வைத்து, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சூலூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 7 மணி முதல் துவங்கியது. சூலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் காலை 6.30 மணி முதலே மக்கள் ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், வரிசையில் நின்று தங்களது வாக்கை அளித்து சென்றனர்.