திருப்பூர் : ஈரோடு நாடாளுமன்றத்திற்குட்பட்ட திருமங்கலத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் : ஈரோடு நாடாளுமன்றத்திற்குட்பட்ட திருமங்கலத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட 248-வது வாக்குச்சாவடியில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற வாக்குப்பதிவு துவங்கியபோது மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அதனை அழிக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. திருமங்கலம் வாக்குச்சாவடியில் மொத்தம் 918 வாக்குகள் உள்ளன. 736 வாக்குகள் பதிவானது. இத்துடன் மாதிரி வாக்கு 41 சேர்ந்து 777 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வித்தியாசம் காரணமாக, அரசியல் கட்சிகள் புகாரை தொடர்ந்து, மறுவாக்குப்பதிவை இன்று நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், திருமங்கலத்தில் உள்ள 248-வது வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு துவங்கி மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது.

இதில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட 248-வது வாக்குச்சாவடியில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற வாக்குப்பதிவு துவங்கியபோது மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அதனை அழிக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. திருமங்கலம் வாக்குச்சாவடியில் மொத்தம் 918 வாக்குகள் உள்ளன. 736 வாக்குகள் பதிவானது. இத்துடன் மாதிரி வாக்கு 41 சேர்ந்து 777 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வித்தியாசம் காரணமாக, அரசியல் கட்சிகள் புகாரை தொடர்ந்து, மறுவாக்குப்பதிவை இன்று நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், திருமங்கலத்தில் உள்ள 248-வது வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு துவங்கி மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது.

இதில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.