சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பிரகாசமாக இருக்கிறது : வாக்குப்பதிவிற்கு பிறகு வேட்பாளர் மயில்சாமி பேட்டி

கோவை : சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பிரகாசமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜி மயில்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை : சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பிரகாசமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜி மயில்சாமி தெரிவித்துள்ளார்.



கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மயில்சாமி முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் மயில்சாமி பேசியதாவது :- எனது ஜனநாயக கடமை நிறைவேற்றியுள்ளேன். சூலூரில் நடக்கும் வாக்குப்பதிவு மனநிறைவாக உள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் ஒளிபெறும். 



சூலூர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் வெற்றி பிரகாசமாக தெரிகிறது. கமல்ஹாசன் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததால், கொந்தளிப்பான நிலைமை இருந்ததால், தேர்தலை இரத்து செய்ய கோரினோம். தற்போது, அந்த அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தடைக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு அதிகரித்துள்ளது,என தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...