நீலகிரி : கோடை விழாவை தொடங்கி வைப்பதற்காக நேற்று உதகை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிங்காரா புனல் மின்நிலையத்தை பார்வையிட்டார்.
நீலகிரி : கோடை விழாவை தொடங்கி வைப்பதற்காக நேற்று உதகை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிங்காரா புனல் மின்நிலையத்தை பார்வையிட்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த 16-ம் தேதி உதகை வந்தார். நேற்று உதகை தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அன்றைய தினம் உதகை ராஜ்பவனில் தென் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளைஆளுநர் கண்டு ரசித்தார். இதைத்தொடர்ந்து, இன்று அவர் மசினகுடி அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் முதல் புனல் நிலையமான சிங்காராபுனல் மின் நிலையத்தை பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம் குந்தா மின் உற்பத்தி மேற்பார்வை பொறியாளர் ரகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு புனல் மின் நிலையத்தை சுற்றி காண்பித்தார். ஆளுநருடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா உடனிருந்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த 16-ம் தேதி உதகை வந்தார். நேற்று உதகை தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அன்றைய தினம் உதகை ராஜ்பவனில் தென் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளைஆளுநர் கண்டு ரசித்தார். இதைத்தொடர்ந்து, இன்று அவர் மசினகுடி அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் முதல் புனல் நிலையமான சிங்காராபுனல் மின் நிலையத்தை பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம் குந்தா மின் உற்பத்தி மேற்பார்வை பொறியாளர் ரகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு புனல் மின் நிலையத்தை சுற்றி காண்பித்தார். ஆளுநருடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா உடனிருந்தனர்.
