கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையில் சிக்கி சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதுடன் குடியிருப்புகளும் சேதமானதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையில் சிக்கி சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதுடன் குடியிருப்புகளும் சேதமானதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட சிறுமுகை, பள்ளேபாளையம், பகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு நேந்திரன், ரோபஸ்டா, கதிலி, பூவன் என பலவிதமான வாழைகள் பயிரிடப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து லட்சக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் போது சூறாவளிக்காற்று பயங்கரமாக வீசியதில் குடியிருப்புகளின் மேற்கூரைகள் பெயர்த்தெரியப்பட்டதால், வீட்டினுள் இருந்தவர்கள் அச்சமடைந்து வெளியேறினர். அதோடு, சாலைகளின் ஓரத்தில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மேலும், பள்ளேபாளையம், பட்டக்காரனூர், ஆனைப்பள்ளிப்புதூர், சென்னம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதனால், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வாழை ஒன்றிக்கும் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து, அறுவடைக்கு இன்னும் ஒருமாதமே இருந்த நிலையில் புடை தள்ளி காய்த்து தொங்கிய வாழைகள் மண்ணில் சாய்ந்து கிடப்பது கண்டு விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த வாழைகளை சம்பந்தபட்ட அதிகாரிகளை கொண்டு உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றில் சிக்கி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதால், அரசு தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட சிறுமுகை, பள்ளேபாளையம், பகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு நேந்திரன், ரோபஸ்டா, கதிலி, பூவன் என பலவிதமான வாழைகள் பயிரிடப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து லட்சக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் போது சூறாவளிக்காற்று பயங்கரமாக வீசியதில் குடியிருப்புகளின் மேற்கூரைகள் பெயர்த்தெரியப்பட்டதால், வீட்டினுள் இருந்தவர்கள் அச்சமடைந்து வெளியேறினர். அதோடு, சாலைகளின் ஓரத்தில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மேலும், பள்ளேபாளையம், பட்டக்காரனூர், ஆனைப்பள்ளிப்புதூர், சென்னம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதனால், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வாழை ஒன்றிக்கும் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து, அறுவடைக்கு இன்னும் ஒருமாதமே இருந்த நிலையில் புடை தள்ளி காய்த்து தொங்கிய வாழைகள் மண்ணில் சாய்ந்து கிடப்பது கண்டு விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த வாழைகளை சம்பந்தபட்ட அதிகாரிகளை கொண்டு உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றில் சிக்கி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதால், அரசு தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.