சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம்

கோவை : சூலூர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியுள்ளது.

கோவை : சூலூர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியுள்ளது.

சூலூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து வருகிறது. மேலும், இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் நேற்று மாலையுடன் நிறைவு செய்தன. ஆனால், சர்ச்சைக்குரிய பேச்சில் சிக்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு, சூலூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அக்கட்சியினர் பெருத்த ஏமாற்றத்துடனேயே இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இதனிடையே, சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணயத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுசெயலாளர் அருணாச்சலம் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 12-ம் தேதி வெடித்த சர்ச்சையால், சூலூரில் பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி கமலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு நாளை நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மேலும், கமலின் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மே 7-ம் தேதியே மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதில் கடிதம் அதிகாரிகளிடம் இருந்து பெறவில்லை. மாறாக, வாய்மொழி உத்தரவிலேயே அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்தின் கடைசி நாளில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், சுதந்திரமான, நம்பிக்கையான தேர்தலை நடத்தவும் வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...