நீலகிரி : குந்தா அருகே கடமான் மாமிசத்தை சமைத்து உண்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி : குந்தா அருகே கடமான் மாமிசத்தை சமைத்து உண்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குந்தா சரகத்துக்கு உட்பட்ட பெல்லத்தி கொம்பை ஆதிவாசி கிராமத்தில், சிலர் கடமான் கறி சமைத்து வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை உதவி காப்பாளர் சரவணன், ரேஞ்ஜர் சரவணன் ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, சிலர் கடமான் மாமிசத்தை சமைத்து கொண்டிருந்தது தெரிய வந்தது.பின்னர், ரங்கசாமி, ரமேஸ், சரவணன், நாகேஸ் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மலைப் பகுதி பாறையிலிருந்து கடமான் தவறி விழுந்து இறந்ததாகவும், அதை சமைத்ததாகவும் கூறினர். இதையடுத்து, வனத்துறையினர் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து உதகை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.