சூலூர் சட்டமன்ற தேர்தலில் பண பட்டுவாடா ஜோர் : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்

கோவை : சூலூர் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகமாக நடந்து வருகிறது.



கோவை : சூலூர் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகமாக நடந்து வருகிறது.

17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. காலியாக இருந்த சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகள் தலா ஒருவருக்கு ரூ. 1,000, ரூ. 2,000 என பூத் சிலிப் வழங்கும் ஏஜெண்ட் மூலம் பணம் விநியோகம் செய்யபட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பணபட்டு வாடா முடிந்த நிலையில், ஒரு சில இடங்களில் பூத் ஏஜெண்டுகள் பணம் தரவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. கட்சி வழங்கிய தேர்தல் நிதியை பூத் ஏஜெண்டுகள் தங்களுக்கு தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ததாக புகார் அளித்து உள்ளனர். இது தேர்தல் பொறுப்பாளர்களின் காதுகளுக்கு எட்டியதால், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் டென்ஷனாகி உள்ளனர். மேலும், வழங்கப்பட்ட பணத்தை அனைவருக்கும் பிரித்து வழங்கிட கூறி கண்டிப்புடன் தெரிவித்து உள்ளனர். எது எப்படியோ ஜனநாயகத்தை பணநாயகம் மூலம் கொடுத்து கட்சியினர் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...