கோவை : சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்களில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்களில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. காலியாக இருந்த சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சூலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர். நா.பழனிசாமி திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொள்ள அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர். இருகூரில் துவங்கிய இந்த இரு சக்கர வாகன பிரச்சாரம், சிந்தாமணிபுதூர், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், இராவத்தூர், ராசிப்பாளையம், மாதப்பூர், ராமாச்சிபாளையம், சோமனூர், சாமளாபுரம், செங்கதுறை, காடம்பாடி, காங்கேயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து சூலூரில் மாலை நிறைவடைகிறது.