குன்னூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள் : போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால், சாலைகளின் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால், சாலைகளின் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில், குன்னூரில் அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டது. மேலும், அதிகாலை நேரத்தில் காற்றின் தாக்கமும் அதிகம் இருந்ததால், குன்னூர் மலை ரயில்நிலையத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து, அங்கிருந்த சொகுசு காரின் மீது விழுந்தது. இதில், அந்த காரின் மேல்பகுதி சேதமடைந்தது. இதேபோன்று, டி.டி.கே. ஏ. சாலையிலும் 3 மரங்கள் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். 



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...