சுல்தான்பேட்டை அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கோவை : சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சர் எஸ் பி வேலுமணி. இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு, சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் வரும் பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலை விபத்தில் சிக்கியிருப்பதை கண்டார். உடனடியாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது பின்னால் வந்த வாகனத்தில் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனை நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்துப் பேசி உடனடியாக முதலுதவி செய்யுங்கள் என மருத்துவர்களிடம் பேசினார். 

இதனிடையே, சாலை விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். விபத்தில் சிக்கியவர் தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...