கோவை : சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
கோவை : சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசும் போது,‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே,’’ என்றார். அவரது பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, தமிழகத்தில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும், அவர்களின் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர். இதில், கோவையில் இந்து முன்னணி, பாரத் சேனா போன்ற அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். இதற்கிடையே, பிரச்சாரத்துக்கு சென்ற கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேரியது.
இந்த நிலையில், கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள கண்ணம்பாளையம், சூலூர், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே, ஒருவேளை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தால், மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் வலிமையை, அரசுக்கும் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசும் போது,‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே,’’ என்றார். அவரது பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, தமிழகத்தில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும், அவர்களின் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர். இதில், கோவையில் இந்து முன்னணி, பாரத் சேனா போன்ற அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். இதற்கிடையே, பிரச்சாரத்துக்கு சென்ற கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேரியது.
இந்த நிலையில், கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள கண்ணம்பாளையம், சூலூர், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே, ஒருவேளை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தால், மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் வலிமையை, அரசுக்கும் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.