கோவை : மோடியின் எடுபாடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை : மோடியின் எடுபுடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியதாவது :- 19-ம் தேதி நடைபெறும் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் பொங்கலூர் பழனிசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சி ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது என அப்புறப்படுத்த வேண்டுமென முடிவெடுத்து மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். மோடியின் எடுபுடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி எல்லா தரப்பு மக்களுக்கும் பல திட்டங்களை தந்தவர். இப்பகுதியில் உள்ள ஆச்சன்குளத்தை தூர்வாரி, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவோம். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும், இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். 10-ம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். கேஸ் சிலிண்டர், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். 5 பவுன் வரை தங்க நகை கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.