கோவை : புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபிரியர் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை : புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபிரியர் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இவர் பணி முடிந்து புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள கடை எண் 1456 - டாஸ்மார்க் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் ஜிங்காரோ என்ற பீரினை வாங்கியுள்ளார். பின்னர், அதை குடிக்கச் சென்றபோது உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, கடை ஊழியரிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மதுபிரியர் தங்கவேல் கூறியதாவது ;- நாங்கள் குப்பைகளை கிளறி நாற்றத்தில் வேலை செய்கிறோம். இதில், உடம்பு வலிக்காக கொஞ்சம் குடிக்க வந்தால் அரசு டாஸ்மார்கில் விசத்தை விற்பனை செய்கிறார்கள். இன்று வாங்கிய இந்த பீரை குடித்தால் உடனடியாக விஷம் ஏறி பலியாகி இருப்பேன். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த விஷயத்தை கண்டு கொள்வதில்லை. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பீர் உடன் வந்த மற்ற பீர்களை சிலர் வாங்கி குடிக்கின்றனர். இது உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும், என தெரிவித்தார்.