நீலாம்பூர் பைபாஸ் அருகே பாலத்தின் மேலிருந்து ரயில்வே டிராக்கில் லாரி விழுந்த சம்பவம் : ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

கோவை : நீலாம்பூர் பைபாஸ் அருகே எதிர் எதிரே வந்த லாரி மோதி பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : நீலாம்பூர் பைபாஸ் அருகே எதிர் எதிரே வந்த லாரி மோதி பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - திருச்சி சாலை அருகே உள்ள நீலாம்பூர் பைபாஸில் வாகனங்கள் அதி வேகமாகச் செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால், இந்த பைபாஸ் சாலையில் தினமும் இரண்டு முதல் மூன்று விபத்துகள் வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 3 மணியளவில் இருகூர் ரயில்வே ட்ராக் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்த லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில், திடீரென இடறி ஒரு லாரி மேலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...