திருப்பூரில் 46-வது கோடைகால சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடக்கம் : வாழை மரத்தினாலான ஆடை அறிமுகம்

திருப்பூர் : திருப்பூரில் 46-வது கோடைகால சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் வாழை மரம் மற்றும் பருத்தி நூலினால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் 46-வது கோடைகால சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் வாழை மரம் மற்றும் பருத்தி நூலினால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



திருப்பூரில் 46-வது கோடைகால சர்வதேச பின்னலாடை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ஹேண்ட் லும் மற்றும் காதி துறையின் தமிழ்நாடு முதன்மை செயலர் குமார் ஜெயந்த், நிட் பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர். 



இந்த கண்காட்சியானது இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர், வகை ஆடைகள் மற்றும் காட்டன் லெனின் காட்டன் ஆடைகள் மற்றும் வாழை மரத்தின் நார் மற்றும் பருத்தி இழைகளால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.



இந்த கண்காட்சியை காண் இஸ்ரேல், கனடா, ஆஸ்ட்ரேயா, சிங்கப்பூர், அமேரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100 பையர்ஸ், 40-க்கும் மேற்ப்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம், செயலாளர் விஜயகுமார், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...