கோவையில் தாய், தங்கை கொலை : மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை : கோவையில் தாய், தங்கை கொலை வழக்கில் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறையின் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.


கோவை : கோவையில் தாய், தங்கை கொலை வழக்கில் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறையின் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

கோவை - அவிநாசி சாலை அருகே உள்ள போலீஸ் பயிற்சிக்கல்லூரி எதிரே வசித்து வந்தவர்கள் பாப்பாத்தி (67) மகள் கீதா(43) மற்றும் மகன் சரவணக்குமார்(39). கடந்த 2016-ம் ஆண்டு பாப்பாத்தி, கீதா ஆகியோர் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இதையடுத்து, பந்தய சாலை போலீசார் நடத்திய விசாரணையில், தாய் மற்றும் சகோதரியை சரவணக்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சரவணக்குமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பண விவகாரம் தொடர்பாக தாய், சகோதரியை கொலை செய்ததை சரவணக்குமார் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு லேசான மனநிலை பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 

இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவின் பேரில், அவருக்கு கடந்த இரண்டு வாரங்களாக கோவை அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு போலீஸார் கண்காணிப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...