கமல்ஹாசனின் நாக்கை துண்டிக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் நாக்கை துண்டிக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ. அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ. அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.